Monday 26 February 2018

Sunday 18 February 2018

பெரும்பாக்கம்- குளிர்காலத்தின் கடைசி மாதத்தில்



சாம்பல் நாரை 
அதிக பறவைகள் பெரும்பாகத்தில் என்ற செய்தி அங்கு செல்லவேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது. இன்று அரவிந்த், மலைநாடன் மற்றும் அவர் மகன், கிஷோர், அமர், வினோத் குமார், நித்யானந்த் மற்றும் அவர் மாணவர்கள், லோகேஷ் பள்ளி மாணவன் என்று ஒரு குழுவாக காலை ஏழு மணியளவில் ஏரியின் பாதையில் நின்றோம். நீர் போல் ஏரி முழுவதும் பறவைகளால் நிரம்பியுள்ளதால் எங்கு இருந்துவேண்டுமென்றாலும் பார்க்க தொடங்கலாம். அதனால்  நின்ற இடத்தில் இருந்தே மடையானை(Pond Heron) வரவேற்றோம்.