Sunday 30 April 2017

இன்னும் ஐரோப்பாவிற்கு செல்லவில்லை



WOOD SANDPIPER
குளிர்கால வலசைபறவைகள் இந்த நேரம் அதன் நாட்டிற்கு சென்று கொண்டிருக்கும் என்ற நினைப்பில் இருந்தேன் அடையார் பாலத்தை கடக்கும் வரை. மிக நீள அலகுடன் கருவால் மூக்கன் கண்ணில் தென்பட்டது இவை இங்கு என்ன செய்கிறது அதன் நாட்டிற்கு செல்லாமல் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு இன்னும் வேறு என்ன, என்ன வலசை பறவைகள் அதன் நாட்டிற்கு செல்லாமல் சென்னையில் இருக்கிறது என்று அறிய நண்பர்கள் மாசிலாமணி, ஷரன், சின்னப்பராஜ் ஆகியோருடன் வலசை செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

Saturday 29 April 2017

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில்



தியடோர் பாஸ்கரன் அவர்களின் சுற்றுச்சூழல் எழுத்துகளை பற்றி, எழுதிய கட்டுரை  BIRDS SHADOW வில் 2016ஆம் ஆண்டு பார்த்தோம். அந்த கட்டுரையை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியதில் அதை அவர் தனது வலைபக்கத்தில் “தியடோர் பாஸ்கரன்-ஒரு கடிதம்” என்ற பெயரில் பிரசுரித்துள்ளார்.



இணைப்பு:

Wednesday 26 April 2017

பட்டாம்பூச்சிகள்- (Butterflies)




இன்றைய நாட்களில் எந்த பறவை, பூச்சிகளை வேண்டுமென்றாலும் கேமராவில் படம் எடுத்து சேகரிக்கலாம். ஐம்பது, நூறு வருடங்கள் முன்பு நிலைமை அப்படி இல்லை என்று அனைவரும் அறிவோம். அதே 200 வருடம் முன்பு? அப்பொழுது வாழ்ந்த தஞ்சை மன்னர், தன் நூலகத்தில் வரையப்பட்ட பட்டாம்பூச்சி படங்களை  வைத்திருந்தார். தஞ்சை சரோபாஜி மன்னர் பார்த்த பட்டாம்பூச்சி புத்தகம் இன்று சென்னை அருங்காட்சியத்தில் இருக்கிறது.

மிக தெளிவாக வரையப்பட்ட படங்கள். பொக்கிஷம் என்று சொல்வோமே அது போல் பாதுகாகப்படுகிறது. இரண்டு முறை பட்டாம்பூச்சி பார்பதற்கு சென்றிருந்தாலும், பட்டாம்பூச்சி பற்றி அதிகம் தெரியாது, இருந்தாலும் சேகரித்து வைத்துகொண்டால் தெரிந்த பிறகு பயன்படும் என்று மொபைலில படம் எடுத்துவிட்டேன். 

Monday 24 April 2017

அடையார் நதி



மணப்பாக்கம் நீர்
 
புதிய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சன் டிவி கனக்க்ஷன் வாங்கியாச்சா என்று ஊர்களில் கேட்பார்கள், கேபிள் இணைப்பு கொடுத்தாச்சா என்பதை இப்படி கேட்பது வழக்கம் அதே போல் தி.நகர் என்றால் சரவணா ஸ்டோர் போனிற்களா, அடையார் என்றால் ஆலமரம் மறந்து ஆனந்தபவன் நினைவுக்கு வரும் அளவுக்கு நம் நினைவுகளை விளம்பரங்களே க்கரமித்து கொண்டுள்ளது. இதில் அடையார் ஆனந்தபவனை தாண்டி அங்கு ஓடும் நதியை பற்றி ஒருவர் படங்கள் வழியாக பேசியிருந்தால் அதை பார்க்காமல் இருக்க முடியுமா?

Friday 21 April 2017

THE HINDU tamil



ஏப்ரல் மாதம் முதல் வாரம் தோறும் வெள்ளிகிழமை பயண கட்டுரைகளை ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியிடுகிறார்கள். அதில் இந்த வாரம் வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்க்கு சென்று வந்ததை பற்றி நான் எழுதிய கட்டுரை வந்துள்ளது. படித்து பாருங்கள் உங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அவை அடுத்த கட்டுரைக்கு பயன்படும்.  








-செழியன்

lapwing2010@gmail.com


 

 

Sunday 16 April 2017

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு-2017



பத்து வருடங்களுக்கு ஒரு முறை மக்களையும், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகளையும் கணக்கெடுக்கபடுகிறது இதை தவிர வேறு எந்த உயிரிணங்களுக்கு கணக்கெடுக்கப்படுகிறது?

Friday 14 April 2017

முதுமலையில்



பெங்களூர், மைசூர், பந்திப்பூர், முதுமலை இந்த வழியாக மதியம் ஒரு மணியளவில் முதுமலையில் இருந்தேன். ஆரவாரம் அதிகம் இல்லை தனியார் வண்டிகளும் கானுலா அழைத்து செல்வதற்கு, வந்து இறங்கும் அனைவரையும் கூப்பிடுகிறார்கள். அரசும் அழைத்து செல்கிறது. இது போல் செல்லும் உலா நம்மால் பெரியதாக ஒன்றும் பார்க்க முடியாது என்றாலும் அங்கு வருபவர்களுக்கு இது மட்டுமே ஒரே வழி. 

பெரும்பாலும் இந்த கானுலா buffer Zone என்று சொல்லப்படுகிற இடத்தில்தான் நம்மை அழைத்து செல்கிறார்கள். Core Zone செல்லவேண்டும்மென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும். பறவை பார்க்க உதகை செல்லும்பொழுது வழியில் தென்பட்டதால் நின்றுவிட்டேன்.

Sunday 2 April 2017

கடிதம்



அன்புள்ள செழியன்,

நான் சமீபத்தில் 'பறவை நோக்குதல்' அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள நேர்ந்தது. எனது முதல் களப்பயிற்சியை Lalbagh-இல் நேற்று தான் முடித்தேன். 'பறவை நோக்குதல்' சம்பந்தமாக தெரிந்து கொள்வதற்காக வலைதளத்தில் தேடுகையில் தங்களுடைய தொடர் கட்டுரையை கண்டடைந்தேன். தெளிவாக, நேர்த்தியுடன் தாங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக சிறப்பான பணியை தமிழில் முன்னெடுத்துள்ளீர்கள். தொடந்து தாங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

நன்றி,

இ.ஜனார்த்தனன்.

Wipro, Bengaluru.