Wednesday 30 November 2016

பறவை நோக்குதல் – 6 வலசை பறவைகள் (Migration Birds)



செங்கால் நாரை வலசை -விக்கிபீடியா
பறவைகள் எந்த அளவுக்கு மனிதர்களுக்கு முக்கியம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பவம் - சீன அதிபர் மாவோ இந்த நாட்டில் இருக்கும் குருவிகள், எலிகள், கொசுக்கள் அழித்து விடுங்கள் என்று ஒரே இரவில் உத்தரவு போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் விவசாயிகளுக்கு தொந்தரவு தருகிறது.

சொன்னது போல் குருவிகளை சுட்டு வீழ்த்தினார்கள். அதன் விளைவு தெரியாமல் இருக்குமா? சில வருடங்கள் பிறகு நான்கு கோடி மக்கள் இறந்த பிறகே அரசுக்கு தெரியவந்தது குருவிகளை அழித்ததால் மனிதர்கள் இறந்தார்கள என்று. சலீம் அலி சொன்ன மனிதர்கள் இன்றி பறவைகள் வாழலாம் ஆனால் பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது என்ற வாசகம் நூறு சதவிகிதம் சரியாக பொருந்தியது மாவோட செயலால்.

Sunday 20 November 2016

TAMIL BIRDERS MEET – 2016



இந்த குளத்தில் நிறைய பவளக்கால் உள்ளான், மடையான், உண்ணிக் கொக்கு இருப்பதை பார்க்க முடிந்தது. இரவிலும் பார்த்து பறவைகள் இருப்பதை உறுதி செய்துகொண்டேன் ஏன்னென்றால் இந்த குளத்தின் மேல்தான் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அமைந்து உள்ளது.

என்னுடைய வாட்சப்பில் ஒரு வாசகம் இப்படி இருந்தது - அணுகுண்டு போட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று நீங்கள் (மனிதர்கள்) பயப்படுகிறீர்கள் அதே பட்டாசு வெடித்தால் எங்கள் (பறவைகளுக்கு) உயிருக்கு ஆபத்து