Saturday 23 July 2016

பறவை நோக்குதல் - தொடர்-3


மாட்டின் அருகில் இருக்கும் இரண்டு பறவைகள் (உன்னிக் கொக்கு மற்றும்  நாகணவாய் (மைனா)) பற்றி போன கட்டுரையில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக மாட்டின் அருகில் இருக்கும் மேலும் ஒரு பறவையுடன் தொடங்குவோம்.

3. கரிச்சான் (Black Drango ) :

image-wiki
1.இரட்டை வால் குருவி என்று அழைக்கப்படும் கரிச்சான் பறவையும் மாட்டின் மேல் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். உடல் முழுவதும் நீல கருப்பாகவும், வால் நீண்டு மற்றும் பிளவுபட்டு இரண்டாக இருப்பது தெரியும். அதனால் இதனை இரட்டை வால் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரில் தமிழ் படம் ஒன்றும் வந்திருக்கிறது.

2.தமிழில் ஒரே பறவைக்கு நிறைய பெயர்கள் இருக்கும். அந்த அந்த வட்டாரத்தில், வட்டார பெயர்களுடன் பறவைகள் அழைக்கப்படுகிறது. (முடிந்த வரை அனைத்து பெயர்களையும் சேகரித்து எழுத முயற்ச்சிக்கிறேன்) அதே போல், இரட்டை வால் குருவிக்கும், இரண்டுக்கு மேற்ப்பட்ட பெயர்கள் உண்டு.

3.பெரும்பாலும் கரிச்சான் இரையை பிடித்த இடத்திலேயே சாப்பிட்டு விடும். இது மின் கம்பிகளில் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.பூச்சிகளை பார்த்தவுடன் மிக வேகமாக பறந்து சென்று பிடித்துவிடும் தன்மையுடையுது.

4.சில சமயங்களில் பெரிய பறவைகள் கொண்டு செல்லும் இறையையும் பிடுங்கும் பறவையான கரிச்சான், தான் கூடுகட்டும் மரத்தில் தன் குஞ்சுகளை கொத்தவரும் பருந்து மற்றும் மற்ற பெரிய பறவைகளை பறந்து சென்று விரட்டும் தைரியம் உள்ள பறவைதான் கரிச்சான் குருவி. அதனால் இவை கூடு கட்டியுள்ள மரத்தில் மற்ற சாதுவான பறவைகள் (மாம்பழ சிட்டு) கூட்டை அமைத்துகொள்ளும். 

கரிச்சனானை போல் மேலும் மூன்று வகை கரிச்சான்கள் உள்ளன. ஆனால் அவை காட்டில் வாழ்பவை.

image-wiki
 கரிச்சானின் வட்டாரப்பெயர்கள்:

1.கரிச்சான் அல்லது கருங் கரிச்சான் 

2.கரிக் குருவி

3.வால் நீண்ட கருங் குருவி

4.கருவாட்டு வாலி 

5.இரட்டை வால் குருவி 

அடுத்து முக்கியமாக பறவை கோக்குதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அமைப்பு ஒன்றை பற்றி பார்ப்போம்.இந்த அமைப்பு மூலம் பறவைகளின் இன்றைய நிலையை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.



IUCN-International Union for Conservation of Nature: ( சர்வதேச இயற்க்கை பாதுகாப்பு இயக்கம்)

உலகில் இருக்கும் பறவை மற்றும் மற்ற ஊயிரினங்கள் எண்ணிக்கை ,அவற்றின் வாழிடம்,தற்போதிய நிலை,அழிந்து கொண்டிருகிறதா,அழிவை நோக்கி செல்கிறதா அல்லது அழிந்து விட்டதா இப்படி ஒவ்வொரு வருடமும் சிகப்பு பட்டியல்(RED LIST) என்று மிக நீண்ட ஒரு பட்டியலை வெளியிடும் அமைப்புதான் சர்வதேச இயற்க்கை பாதுகாப்பு இயக்கம் (IUCN). இந்த அமைப்பு 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை செயல்படுகிறது.

ஆனால் சிகப்பு பட்டியலை(IUCN -RED LIST) 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பால் பறவைகளுக்கு என்ன நன்மை என்று பார்த்தால் 

தினமும் மனிதன் இறப்பதை பல வழிகளில் நமக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொள்ளமுடிகிறது. அடுத்து எதனால் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்ற தகவலும் நமக்கு தெரிகிறது. விபத்தில் இறந்தார்கள் அல்லது ஏதாவது புதிய நோய் வந்து மனிதர்கள் இறந்து கொண்டிருகிறார்கள் என்று தெரிய வந்தால் உடனே அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கிறது.

இப்படி மனித உயிர்களை பற்றி தெரிந்துகொள்ள நிறைய வழிகள் இருந்தாலும் பறவை, விலங்குகள் இவற்றின் அழிவை பெரும்பாலும் பத்திரிக்கை கவனத்திற்கு வருவதே இல்லை இப்பொழுது கூட பறவைகளின் அழிவின் விவரத்தை இது போல் இருக்கும் அமைப்பின்(IUCN) மூலம் தான் பதிரிக்கைகளுக்கே தெரியவருகிறது. அரசியல் நிருபர்கள், சினிமா நிருபர்கள், க்ரைம் நிருபர்கள் என்பது போல் எந்த பத்திரிகையிலாவது சுற்றுச்சூழலுக்கு என்று தனி நிருபர்கள் உள்ளார்களா? என்று தெரியவில்லை.

மனித உயிர்களின் விவரங்கள் தினமும் தெரிவது போல் பறவைகள் அழிவின் விவரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இது போல் ஒரு பட்டியல் மூலம்தான் தெரியவருகிறது. இந்த அமைப்பால் பறவைகளுக்கு என்ன நன்மை என்று இப்பொழுது புரிந்திருக்கும். இது போல் அமைப்பு(IUCN) இல்லை என்றால் மனிதனை தவிர்த்து மற்ற உயிர்களின் விவரங்கள்?  

இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலையை பற்றியும் ஒவொரு ஆண்டும் இந்த அமைப்பு(IUCN) பட்டியல் ஒன்றை வெளியிடுகிறது. உதாரனத்திற்க்கு 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் சிகப்பு பட்டியலை பார்ப்போம்.

IUCN பறவைகளின் இருப்பு மற்றும் அதன் அழிவு நிலைகளை ஏழு வகையாக பிரித்து கிழே இருக்கும் படத்தில் இருப்பது போல் வகைப்படுத்துகிறது.


1.LC-(LEAST CONCERN) சொல்லத்தகுந்த(வருத்தப்படாத) அளவுக்கு பறவைகள் உள்ளது

2,NT-(NEAR THEREATENED) அச்சுறுத்தும் அளவில் பறவை உள்ளது 

3.VU-(VULNERABLE) அதிகமாக அச்சுறுத்தம் அளவில் பறவை உள்ளது

                    -கடந்த 10 வருடத்தில் 50 சதவிகிதமாக பறவை குறைந்து உள்ளது

                    -அதாவது 10000க்கும் குறைவாக அந்த பறவை உள்ளது. 
  
4.EN- (ENDANGERED) -பறவை அழிந்து கொண்டிருக்கிறது

                                     - கடந்த 10 வருடத்தில் 70 % பறவை அழிந்து உள்ளது 

                                    - அதாவது 250 பறவைகள் மட்டுமே இன்று உயிர்வாழ்கிறது 

5.CR-(CRITICALLY ENDANGERED) -அழிவின் விளிம்பில் பறவை உள்ளது.

                                                         -90 % பறவை அழிந்து உள்ளது 

                                                         -அதாவது 50 பறவை மட்டுமே உயிர் வாழ்கிறது  

6.EW-(EXTINCT IN WILD) -வனத்தில் முற்றிலும் பறவை அழிந்துவிட்டது.  

                                            -ZOO போன்ற இடத்தில் வைத்து காப்பாற்றப்படுவது

                         - பாதுகாக்க வேண்டும் என்று அவற்றை குறிப்பிட இடத்தில வைத்து காப்பாற்றுவது. 

7.EX-(EXTINCT) கடைசியாக இருந்த ஒரு பறவையும் இறந்துவிட்டது.அதாவது   
            முற்றிலும் இவ்வுலகில் இருந்து அந்த பறவை அழிந்து விட்டது.

ஒரு பறவை இன்று பூமியில் எந்த நிலையில் இருக்கிறது என்பது மேலே உள்ள குறியீட்டின் மூலமே சிகப்பு பட்டியலை வெளியிடுகிறது. 
 
2014 ஆம் ஆண்டு 173 பறவைகள் அழிவின் நிலையில் இருந்துள்ளதாக அறிவித்த IUCN-சிவப்பு பட்டியல் அதில் ஒரு பறவை மட்டும் அழிவின் நிலையில் இருந்து வெளியே வந்து 2015ல் மேலும் எட்டு பறவைகள் சேர்ந்து 180ஆக உள்ளது.


RED LIST OF INDIAN BIRDS  (2015) - 8 பறவைகள்:

1. வடக்கு ஆள்காட்டி (Northern Lapwing - Grass Land Bird)

2.Red Knot

3. கர்லூ உள்ளான் (Curlew  Sandpiper)

4.Eurasian oyster Catcher

                                                         5. பட்டைவால் மூக்கன் (Bar-Tailed Godwit)

                                                         6. கொண்டை முக்குளிப்பான்  (Horned Grebe)

                                                         7.Common Pochard

                                                         8. புல்வெளிக் கழுகு  (Steppe Eagle)

முதல் பறவை புல்வெளி வாழ் பறவை (Moved From LC to NT)

அடுத்து நான்கு பறவைகள் நீர் வாழ் பறவைகள் (WETLAND BIRDS) (Moved From LC to NT)

கடைசி இரண்டு பறவை நீர் வாழ்(WETLAND BIRDS) பறவைகள் (Moved From  LC to VULNERABLE)

NEAR THEREATENED  to  LEAST CONCERN

2014 ஆம் வருடத்தில் NTயில் இருந்த EUROPEAN ROLLER 2015தில் LCக்கு வந்திருப்பது மட்டுமே சந்தோஷம் தரக்கூடிய செய்தியாகும்.
 

தமிழில் அழிந்துவரும் உயிரினங்களை பற்றி சிகப்பு பட்டியல் என்ற சிறு புத்தகம் திரு.சுப்ரபாரதிமணியன் எழுத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 4. வெண்மார்பு மீன்கொத்தி (White Throated Kingfisher):
 
image-wiki
உலகமெங்கும் தொண்ணுறு வகையான மீன்கொத்திகள் இருந்தாலும் இந்தியாவில் சில வகையான மீன்கொத்திகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் வென்மார்பு மீன்கொத்தி.

மைனா அளவுள்ள இவை, தொண்டை மற்றும் வயிர் பகுதியில் வெண்மையாக காணப்படுவதால், வென்மார்பு மீன்கொத்தி ஆகியது. உடலின் மேற்பரப்பில் அடர் நீல நிறத்திலும் மற்றும் தலை,வயிரின் பாதிக்கு மேல் காப்பி வண்ணத்தில் காணப்படும். அலகு மற்றும் கால்கள் ரத்த சிகப்பில் இருக்கும்.

வாழிடம்:
- அதிக மின் அழுத்தம் செல்லும் மின் கம்பிகளில்  அமர்ந்திருப்பதை பார்க்கமுடியும்,
- வயல்வெளி,
- நீர்நிலைகளில் அதிகமாக காணபடும்,
- நம் வீட்டருகில் சுலபமாக பார்க்க கூடிய பறவைகளில்  இவையும் ஒன்று.

உணவுகள்:
சிறு மீன்கள், தவளை குட்டிகள், சிறு உயிர்கள், பல்லி, நத்தை போன்றவை.
நீரை மட்டும் நம்பி இல்லாமல் சிறு உயிர்களையும் பிடித்து சாப்பிடுவதால் நீர் இல்லாத சமயங்களில் மற்ற பறவைகளை காட்டிலும் இவை தப்பித்து வாழ்ந்துவிடும்.

முட்டை:
தன் நீலமான அலகால் (ஏரி அல்லது ஆற்று பகுதிகளில்) தரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும் பறவையான மீன்கொத்தி பறவை மார்ச் முதல் ஜூலை வரை இவற்றின் இனபெருக்க காலமாகும்.

image-Arun
பறவையின் வட்டாரப்பெயர்கள்:

1.சிரல்

2.சிச்சிலி 

3.பொன்வாய்க் குருவி

4.மூக்கன்

5.விச்சுலி 

6.கலகக் குருவி 

7.பெரு மீன் கொத்தி


                                                                                                                                                                 -   தொடரும்

                                                                                  -செழியன்
 

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com

முதல் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்:
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html