Wednesday 16 December 2015

afternoon in pallikaranai



நாளை கனமழை பெய்யும் என்று தொலைகாட்சியில் தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்தார்கள் ஆனால் அவை வானத்திற்கு தெரியாது போலும் அதனால் சுளீர் என்று வெய்யில் அடித்து கொண்டிருந்தது. மதியநேரமாக பள்ளிகரனையை சுற்றி வரலாம் என்று கேமரா, பைனாகுலர் உடன் கிளம்பிவிட்டேன்.

வேலைச்சேரி சென்று பள்ளிகரணை செல்லலாம் ஆனால் நான் omr வழியாக சென்று டோல் பூத் தாண்டி வலது புறம் திரும்பினால் உடனே இன்னமொரு டோல் பூத் வருகிறது அதற்க்கு முன்பு டிராபிக் போலீஸ் மாத கடைசி என்று மடக்கி கொண்டிருந்தார்கள் அவர்களிடம் மாட்டாமல் டோல் தாண்டினால் சிறுது தூரத்தில் பள்ளிகரணை சதுப்பு நிலம் நம்மை பார்க்கும்.


நாம் நின்று பார்பதற்க்குள் நம் அருகிலேயே அங்கு செல்பவர்கள் வண்டியை ஓரம் கட்டி ஜிப்பை கழட்டி விடுகிறாகள் நாம் தான் தள்ளி தள்ளி செல்லவேண்டும். ஒரு பனை ஓலை போட்ட இரண்டு பேர் அமரும் அளவுக்கு குடில் ஒன்று உள்ளது ஆனால் அங்கு நாம் செல்ல முடியாத அளவுக்கு பாதை நம்மை தடுக்கும். இருந்தாலும் கிடைக்கும் இடத்தில இருந்து பறவையை பார்க்க தொடங்கி விட்டேன் முதலில் நிறைய cattle egret என்னை அழைத்தது.நல்ல மழை காலம் ஆதலால் சாக்கடை தண்ணியும் சதுப்பு நிலத்தில் வந்து கலக்கிறது.


நான் இருந்த இடத்தின் மரத்தின் மேல் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது அவற்றை படம் எடுத்து பிறகு சதுப்பு நிலத்தில் கவனத்தை திருப்பினேன். பறவைகள் தொலைவில் இருப்பதால் பைனாகுலர் இல்லாமல் சிறு பறவைகளை பார்ப்பது கடினமாகவே இருந்தது.சதுப்பு நிலத்தின்  இடையில் உயரமான மின்கம்பிகள் அதில் நிறைய கூழைக்கடாகள் பார்க்க முடிந்தது வெறும் கண்ணில் பார்த்தல் சிறு பறவையாகவே தெரிகிறது.பள்ளிகரணை செல்பவர்கள் பைனாகுலர் எடுத்து செல்லவது சிறந்தது.
அதிகமாக தாழை கோழிகள் விளையாடி கொண்டிருகிறது. சாலையின் இருபுறத்திலும் தாழை கோழிகள் இருப்பதை பார்க்கலாம்.சதுப்புநிலத்தின் மற்றொரு புறம் குப்பைகளை கொண்டு மூடி விட்டார்கள்.அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

என் பக்கத்தில் தன் எட்டு வயது சிறுமிக்கு பறவை நோக்குவதை பற்றி சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் சிறுமியின் தந்தை. சிறுமியிடம் தரமான பைனாகுலர் இருப்பதை பார்க்க முடிந்து. அவங்க அப்பா சொல்ல சொல்ல அவற்றை பார்த்து கொண்டே, சந்தேகங்களையும் கேட்டு கொண்டே வந்தார்.இந்த சிறுமிக்கு எதிர் வரும் காலம் வீனாகாது என்பது நிச்சயம்.

சாலையின் முடிவில் அதாவது வேலைச்சேரி சாலை சந்திக்கும் இடத்தில நிறைய அரிவாள் மூக்கன்,கூழைகடா மரகிலையில் இருப்பதை பார்க்க முடியும். புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்க கொண்டவர்களையும், நீண்ட லென்ஸ்கள் உடைய கேமரா,தோழன் போல் அவர்களுடன் தொங்கிகொண்டிருந்தது.

வேடந்தாங்களில் நிறையை பறவைகள் வந்துள்ளதாக தினசரி செய்தித்தாள் தினசரி
சொல்லிக்கொண்டிருகிறது.அடுத்து அங்கு தான் செல்லவேண்டும்.

பார்த்த பறவைகள்

உன்னி கொக்கு

சின்ன கொக்கு 

பாம்புதாரா -நயன்தார அல்ல 

கூழைகடா

அரிவாள் மூக்கன்

மடையான்

வெண் மார்பு மீன் கொத்தி

தாழைக்கோழி

பருந்து 

நீர்காகம்.

நான் சென்ற பொழுது இவ்வளவே பார்க்க முடிந்தது.

                                                         -செழியன்



Sunday 1 November 2015

Bannarghatta Zoological Park



பெங்களுரு, கோபாலன் மால் எதிரில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து சரியாக பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பானர்கட்ட உயிரியல் பூங்காவுக்கு செல்வதற்க்கு.இரண்டு விதமாக பார்க்கலாம் உயிரியல் பூங்கா மற்றும் சபாரி செல்லலாம் .சபாரி செல்பவர்கள் சிலர் உயிரியல் பூங்காவுக்கு வருவதில்லை இரண்டில் ஏதாவது ஒன்றை பார்ப்பவர்களே அதிகம்.


நான் ஏறிய பஸ் முழுவதும், ஒரு கிலோமீட்டர் தள்ளியே விட்டு விடுவோம், நடந்து தான் செல்லவேண்டும் என்றே சொல்லி கொண்டிருந்ததால் ஏறி, ஏறி இறங்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே எந்த பஸ் போகும் என்று கேட்டு தெரிந்தே வந்தேன் ஆனால் அந்த பஸ் எல்லாம் தள்ளியே நிற்கும் என்றே நடத்துனர் சொல்வதை கேட்க்க வேண்டியிருந்தது. கடைசியாக உயிரியல் பூங்கா செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து விட்டேன்.  

பெங்களுருளில் இருக்கும் ஒரே சவுகரியம் நாம் தமிழிலேயே பேசலாம் அவர்களும் நமக்கு புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழில் பேசுவார்கள் சில இடத்தில நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கோமோ என்று உணரும் அளவுக்கு தமிழ் கபடி விளையாடும்.அதே போல் தான் சித்தூரிலும் (ஆந்திரா)

அரைமணி நேரத்தில் உயரியல் பூங்காவை அடைந்தேன்.பஸ் நிறுத்தத்தை ஒட்டியது போல் உயிரியல் பூங்கா தொடங்குகிறது.நான் சபாரி செல்லாமல் சுற்றி பார்க்கலாம் என்று டிக்கெட் கவுன்ட்டர் நோக்கி நடந்தேன்.எனக்கு டிக்கெட் வாங்கிய பிறகு கேமராவுக்கு டிக்கெட் என்று கேட்டேன், என்னை ஒரு முறை ஏற பார்த்த பிறகே டிக்கெட் கொடுத்தார் முதலில்  புரியவில்லை பிறகு தெரிந்தது, யாரும் கேமராவுக்கு டிக்கெட் வாங்குவதில்லை என்று. ஆனால் கேமராவுக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற பலகை அவரை பார்த்து சிரித்து கொண்டிருந்தது. 

இடது புறத்தில் சபாரியும் வலது பக்கம் திரும்பினால் உயரியல் பூங்காவும் செல்லலாம்.வலது புறம் திரும்பி சென்றேன். சென்னை வண்டலூர் உயரியல் பூங்கா போல் பெரியதாக இல்லாமல் கிண்டி பூங்காவை விட பெரியதாக இருந்தது.மூன்று நீர் யானை என்னை வரவேற்றது நீரில் விளையாடி காட்டியது.

     
                          
மிக பெரிய வலை மூடிய குளத்தில் இராகொக்கு ,கூழைகடா,அரிவாள் மூக்கன்,கரண்டிவாயன் என்று நிறைய நீர் வாழ் பறவைகள் பாட்டு பாடி கொண்டு இருந்தது.ஏறக்குறைய எல்லா உயிரியல் பூங்காவிலும் இதை போல் ஒரு குளம் ஆரம்பத்திலேயே காணப்படுகிறது.இவற்றை தொடர்ந்து தன்னந்தனியாக காட்டு பூனை ஒன்று சுற்றி வரும் கூண்டு அருகில் சென்று நின்றேன்.மிக பெரிய கூண்டு அதனால் சவகாசமாக சுற்றி வந்து நம்மை பார்க்கிறது.பூனை உருளுவதற்கு பச்சை பசேல் என்று புல் தரை உள்ளது. 

                            
மிக உயர்ந்த மரத்தில் மட்டும் வாழும் பறவையான இருவாச்சி பறவை ஒன்று  கூண்டில் அல்லல் பட்டது. சிப்ஸ் ஒன்றை ஒருவர் கொடுத்தார் அதை எடுப்பதற்கு தன் நீண்ட முக்கை வெளியே நீட்டி முயற்சி செய்து கொண்டிருந்தது.இங்கு தான் நான் இந்த பறவையை முதல் முறையாக பார்க்கிறேன். மேற்கு தொடர்ச்சி மலையில் இப்பறவை காணப்படும். கேரளாவின் மாநில பறவை மலபார் இருவாச்சி பறவையாகும் அதே போல் அருணாச்சல பிரதேசத்தின் மாநில பறவையாகும்.


இந்தியாவில் ஏழு வகையான இருவாச்சி பறவை உள்ளது இவை போடும் சத்தம் ஹெலிகாப்டர் சத்தம் போல் இருக்கும்.
                                
சிங்கம் இருப்பதற்கான பலகை காணப்படுகிறது ஆனால் பார்க்க முடியவில்லை நிறைய சிறுத்தைகள் உலாவியும் சிலது பாறை மேல் படுத்து யார் பார்த்தால் எனக்கென்ன என்பது போல் அமைதியாக இருக்கிறது.உயிரியல் பூங்காவில் நிறைய பறவைகள், குரங்குகள், மான்கள் பார்த்தாலும் சிங்கம், சிறுத்தை, புலி பார்ப்பது என்பது உண்மையில் சிலிர்ப்பை தரும் விஷயமாகும்.அதன் அருகில் செல்லும்பொழுதே உடம்பு சிலிர்த்து எங்கே நம் அருகில் வந்து விடுமோ என்ற உணர்வையும் தரும். அது மட்டும் இல்லாமல் எங்கே கூண்டை விட்டு வெளியே தப்பி வந்து விடுமோ என்ற பய உணர்வையும் தந்து விடுகிறது.

இரண்டு கரடிகள், தாம் கூண்டில் இருக்கோம் என்று நன்கு உணர்ந்து படுத்தே காட்சியளித்தது.நிறைய நட்சத்திர ஆமைகள் வலம் வந்து உணவை சாப்பிட்டும், மயில்கள் ஆனந்தமாக தோகை விரித்து ஒன்று ஆடியும் மற்றொன்று உயரமான கொம்பில் அமர்ந்தும், ஆந்தைகள் என்னை பார்த்து ஏன் காலையில் வந்து என் தூக்கத்தை கெடுக்கிறாய் என்பது போல் இருந்தது. 

பேனர்கட்டா உயிரியல் பூங்கா அமைதியான சூழலில் அமைந்து இருப்பதால் எந்த வித வெளி சத்தமும் இல்லாமல் நாம் உள்ளே வலம் வரலாம் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

மலைப்பாம்பு, மான்கள், நிறைய வெளிநாட்டு பறவைகள், குரங்குகள்,யானைகள்,காட்டு கோழிகள், வெள்ளை புறா,வெள்ளை மயில், கூகை இவற்றை நம் செய்திதாளில் ஆஸ்த்ரேலியா பறவை என்றே தவறாக குறிப்பிடுவார்கள்.குள்ள நரி இரண்டு என்று பார்ப்பதற்கு நிறைய உள்ளதால் தயங்காமல் சென்று வரலாம் முடிந்தால் சபாரியும் செல்லலாம்.

ஒவ்வொரு கூண்டின் முன்பும் அந்த கூண்டில் இருக்கும் பறவை அல்லது விலங்கு பற்றிய தெளிவான தகவல்கள் கொடுத்துள்ளார்கள்.உதாரணத்துக்கு லவ் பேர்ட்ஸ் என்று நாம் அழைக்கும் சிறிய பறவையை பற்றி 

LENGTH     : 18CM

WEIGHT    : 28-30 GM

LIFE SPAN : 5-10 YEARS

SEXUAL MATURITY : 3-4 MONTHS

INCUBATION PERIOD : 18 DAYS

CLUTCH SIZE : 5-6 EGGS

HABITAT : SCRUBLAND, OPEN WOODLAND AND GRASSLAND

RANGE : AUSTRALIA, EXCEPT EASTERN COSTAL AREAS.

DIET IN WILD : SEEDS OF SPINIFEX, GRASS WEEDS AND SOMETIME RIPENING WHEAT.

                                                  DIET IN ZOO:( PER HEAD)
                                      CORIANDER LEAVES- 15G / MILLET – 15G

என்னை சுற்றி நிறைய மாணவர்கள் தமிழில் பேசி விளையாடி கொண்டிருந்தார்கள் எனக்கு கிண்டி பூங்காவில் இருப்பது போல் இருந்தது. அவர்களை அழைத்து கேட்டதற்கு கோரமங்களாவில் உள்ள பள்ளியில் படிப்பதாகவும் திருவண்ணாமலையில் இருந்து வந்து இங்கேயே செட்டில் ஆனவர்கள் என்று தெரிந்தது. வருடம் ஒருமுறை பள்ளியால் இங்கே அழைத்து வரப்படுகிறார்கள்  ஆனால் இவர்கள் சுற்றி பார்ப்பதை விட விளையாடுவதே சிறந்ததாக கருதுகிறாற்கள். எல்லா மாணவர்களும் வேகமாக சுற்றி வந்து பறவைகளை பார்த்து விட்டு விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள் .


               -    செழியன்





 


Monday 26 October 2015

3000 PARAKEET




இவரைப் பற்றி தின செய்தித்தாளில் தான் படித்தேன், அவர் இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்து, சென்றும் வந்தேன். பார்க்க பார்க்க ஒரே பச்சை கலராகவே தெரிந்தால் என்ன உணர்வது கண்ணை மூடினால் எப்படி ஒரே இருட்டாக உணர்வோமோ அப்படி ஒரே பசுமையாக உணர்ந்தேன். ஒரே நேரத்தில் மூன்றாயரதிற்க்கும் மேல் பச்சைகிளிகள் ஒரு விட்டிற்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கடந்த பத்து வருடமாக வந்து செல்வதை அந்த விட்டின் உரிமையாளர் சொல்லும்பொழுது ஆச்சரியம் மட்டுமில்லாமல் சந்தோஷமாகவும் இருந்தது. 
  
வீட்டின் பக்கத்தில் இருக்கும் கிளிகள் தான் வருகிறது என்று நினைத்து இருந்தேன்.  இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் வந்து செல்கிறது என்று அவர் சொல்ல எங்கு எங்கு இருந்து வருகிறது என்ற கேள்வியும் நான் கேட்க்க வேண்டியிருந்து.திருவான்மியூர்,பெரம்பூர்,அண்ணாநகர்,தாம்பரம்.....இவற்றால் அங்கு இருக்கும் புறா, காகம் போன்ற பறவைகளுக்கும் உணவு கண்டிப்பாக உண்டு என்பதை பார்க்க முடிந்தது.

ஒரு மாலை பொழுது அங்கு செல்வது என்று முடிவெடுத்து இரண்டு கிலோ அரிசியுடன் சென்றேன்.நான் சென்ற பொழுது அவர் நீண்ட மர பலகைகளை எடுத்து இரண்டு பக்கம் உள்ள சுவற்றின் மேல் நீட்டி வைத்து, ஊறவைத்த அரசியை அரை அடி இடைவெளியில் வைத்து கொண்டிருந்தார்.போகும் பொழுது ஏதாவது வாங்கி சென்றால் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று சொன்னவரையும் கூடவே அழைத்து சென்றேன். 

அரிசி வைத்து கொண்டிருக்கும் பொழுதே பச்சைக்கிளிகள் இப்படியும், அப்படியும் பறந்து செல்வதை பார்த்து கொண்டே அவரிடம் பேச்சு கொடுத்தேன்.சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்து வந்தவரிடம் ஆச்சரியம் விலகாமல் எப்படி இதை தொடர்ச்சியாக செய்து வருகிறிர்கள் என்ற கேள்விக்கு பத்து வருடமாக நாள் தவறாமல் காலை, மாலை இவர்களுக்கு உணவை வைத்து விடுவேன் இதுவரை ஒரு நாள் கூட தவறியதில்லை, இதனால் எந்த நிகழ்சிகளுக்கும் செல்லவும் முடிவதில்லை என்று சொன்னவர் அனைத்தும் சொல்லி முடித்தார்.

கிளிகளை அவர், இவர் என்றே மரியாதையாக சொல்கிறார் நான்தான் ஆரம்பத்தில் முழித்து பிறகு கிளிகளை தான் இவர் இப்படி சொல்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.அவர் பேச்சில் நிதானம் உண்டு.பல மாநில  தொலைக்காட்சியில் இருந்து வந்து கிளிகள் சாப்பிடுவது பறப்பது,என்று முழுவதும் வீடியோவாக எடுத்து  தொலைக்காட்சி செய்திகளில் வெளியிடுகிறார்கள்.பல கல்லுரி  ஆராய்ச்சி மாணவர்கள் கூட ஆவண படமாக எடுத்து யூ டியூப்பில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

உணவை வைத்து விட்டு பிறகு, நாம் கீழே போய்விடுவோம் என்றார் அப்பொழுதுதான் கிளிகள் வரும் இவ்வளவு வருடம் ஆனாலும் நான் இருந்தாலும் கிளிகள் சுதந்தரமாக  வராது என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கிகொண்டிருந்தார். நாங்களும் அவருடன் கீழே வந்தடைந்தோம்.மழை காலத்தில் மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.இவர் இருந்தாலும் கிளிகள் வரும் அது எப்படி என்று அடுத்து சொல்கிறேன்.கீழே வந்த பிறகு கிழே இருந்து மேலே பார்ப்பதும் அவருடன் பேசுவதும் என்று நிமிடங்கள் சென்று கொண்டிருந்தது.

சில மணிநேரத்தில் நூற்றுகணக்கில் பச்சைகிளிகள் வந்து அமர்ந்திருந்தது. ஒரே இடத்தில் இவ்வளவு பச்சைகிளிகளை பார்க்கும்பொழுது ஆச்சரியத்தை தந்தது.அந்த பக்கம் போவோரும் மேலே பார்த்தே செல்கிறார்கள். இவர் கீழே வந்து நிற்பதற்கும்  காரணம் இல்லாமல் இல்லை. இரண்டு நாட்கள் முன்பு ஒரு பையனும் இரண்டு பெண்களும் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது நம்ம பையன் சீன் போடுவதற்கு இப்போ பாருங்கள் என்று அருகில் இருக்கும் கல்லை எடுத்து கிளிகளை நோக்கி எரிய தொடங்கினான். உடனே இவர் சென்று அதை தடுக்க வேண்டி இருந்தது. தினமும் இப்படி பட்ட தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று சொன்னவர் இங்க யாரும் இதற்க்கு எந்த உதவிகளையும் செய்வதில்லை நானும் யாரிடமும் கேட்பதும் இல்லை ஆனால் ஒரே பிரச்னை வீட்டு ஓனர் தான் வீட்டை காலி பண்ண சொல்கிறார் என்று சாதாரணமாக சொல்கிறார். 

ஆறு மணியளவில் கிளிகள் செல்ல தொடங்கி ஆறு பதினைந்துக்கு ஏறக்குறைய அனைத்தும் சென்று விட்டது.மழை காலத்தில் நிலைமையே வேறு காலையில் வரும் கிளிகள் மாலை வரை இங்கேயே தங்கி நாள் முழுவதும் சாப்பிட்டு  கொண்டேயிருக்கும். அப்பொழுது, நான் இருந்தாலும் கிளிகள் என் அருகிலேயே வந்து அமரும் என்றவர் மழைக்காலத்தில் நாள் ஒன்றுக்கு அறுபது கிலோ அரிசியும் இப்பொழுது முப்பது கிலோ அரிசி மட்டும் போதும் என்றார்.

பச்சைக்கிளிகளில் அலெக்ஸ்சாண்டர் வகை ஒன்று உண்டு என்று தெரியும் அதனால் அவற்றை காண்பிக்க சொன்னேன். மேலே பார்த்தவர் சிறிது நேரத்தில் அங்கே பாருங்கள் என்று சத்தமாக சொன்னார்  நீண்ட வாலும் மற்றதை விட பெரியதாக இருந்தது அலெக்ஸ்சாண்டர் பச்சைக்கிளி. பொதுவாக ஆண் பச்சைக்கிளிகள் கழுத்தில் சிகப்பு கலர் வலையம் போல் இருக்கும். பெண் கிளிக்கு அது கிடையாது. 

இதுவரை இரண்டு, மூன்று முறைதான் நான் ஊரில் இல்லாமல் இருந்தேன் அப்பொழுது என் மனைவி பார்த்துகொண்டார். காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஐந்து முப்பதுக்குள் உணவை வைத்து விடவேண்டும் சரியாக ஆறு மணிக்கு எல்லா கிளிகளும் வந்து விடும் அதே போல் தான் மாலையும். சாரா சரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பச்சைகிளிகள் வருவதாக குறிப்பிட்டவர்.அமெரிக்கன் கான் தான் இவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு அதை என்றாவது ஒரு முறைதான் தருவேன் விலை அதிகம்  என்பதால் அவ்வவ்போது வாங்க முடியவில்லை என்றார்.

YOU TUBE LINK - https://www.youtube.com/watch?v=J_GyoQ3mahE

வீட்டின் முன்பு இரண்டு பச்சைக்கிளி படத்துடன் ப்ளெக்ஸ் பேனர் வைத்து இருக்கிறார்.அதில் ஒரு கிளி மிக குட்டியாக தன் தாயுடன் வந்து உணவு சாப்பிடுவதை படம் உள்ளது.தினமும் நண்பர்களுக்கு பச்சைக்கிளி படத்துடன் தான் வாட்ஸ் அப் செய்தி அனுப்புகிறார். நீங்கள் ஒரு முறை சென்று வாருங்கள் காலை வேலையில் பச்சைக்கிளி படத்துடன், உங்கள் மொபைல் வாட்ஸ் அப் உங்களை எழுப்பும்.



 - CHEZHEYAN