Thursday 13 November 2014

MAGAZINE- KAADU




தமிழில் வன விலங்கு, பறவைகள் குறித்து தனியாக வார, மத இதழ் வருவது இல்லை அதை எல்லாம் யார் படிக்க போகிறார்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம் ஆங்கிலத்தில் Sanctuary Asia, Cub Sanctuary Asia, National Geography போன்ற அருமையான மாத மற்றும் இரு மாத இதழ்கள் வருகிறது ஆனால் தமிழில்?

உயிர்மையில் தியடோர் பாஸ்கரன் எழுதும் கட்டுரைகள் தான் தொடர்ச்சியாக வரும் காட்டுயிர் பற்றிய செய்திகள். தனி மாத இதழ் என்று இதுவரை இல்லை என்ற குறையையை போக்கும் விதமாக தடாகம் பதிப்பகம் புதிதாக காடு என்று இரு மாத இதழை வெளியிட்டிருக்கிறது.

முதல் இதழ் :

எறும்புகளை வைத்து காட்டை உருவாகிய மனிதனை பற்றி கட்டுரை அருமையாகவும் பிரமிக்கதக்கதாகவும் இருக்கிறது.

தியடோர்டர் பாஸ்கரன்- நதி எங்க போனது? என்று கட்டுரையும்

அலையாத்தி காடுகளை பற்றி நேர்காணலும் 

தமிழகப் பழங்குடிகள் அறிமுகம் 

இன்னும் நிறைய கட்டுரைகளும் வண்ண புகைப்படங்களும் உள்ளதால் காடு உண்மையில் காட்டுயிர் பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கும்.

எப்படி இலக்கியத்திற்கு நிறைய பத்திரிகைகள் இருக்கிறதோ அதே போல் விலங்கு, பறவை, சுற்று சூழல் பற்றி தனியாக பத்திரிகைகள் வந்தால் தான் மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்ப்படும். அதன் தொடக்கம் காடு 

காடு பத்திரிக்கை கிடக்கும் முகவரி :

தடாகம்
NO:112,  திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர்  சென்னை-41
PH- 044-43100442/  8939967179
Mail- kaadu@thadagam.com 

விலை -60 .00 ரூபாய் 

[முகமது அலி காட்டுயிர் என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறார். அதை பற்றி ஒரு கட்டுரையில் பார்ப்போம்]


1 comment: